மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்!

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்!

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.

உடன் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி,திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.மகேஸ்வரி சண்முகநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story