டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச வகுப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச வகுப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச வகுப்பு
செங்கல்பட்டு மாவட்டம்,சதுரங்கபட்டினத்தில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி நடைப்பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,திருக்கழுக்குன்றம் ஒன்றிய சதுரங்கபட்டினம் நூலகத்தில் திருக்குறள் வகுப்பு நடைபெற்று வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக டி என் பி எஸ் சி (அரசு தேர்வுகளுக்கான கட்டணம் இல்லா) பயிற்சி வகுப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் சதுரங்கப்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்பில் படித்து பயன்பெற்றனர். இன்றைய தினம் (ஜுன் 9 தேதி) குருப் – 4 தேர்வு எழுதவுள்ள நிலையில், பயிற்சி வகுப்பின் நிறைவு விழா சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

சமூக ஆர்வலர் சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி ஒளி நண்பர்கள் குழுவின் தலைவர் பு இரமேஷ் வரவேற்புரை வழங்க பயிற்சி வகுப்பின் ஆசிரியர்களான சதிஷ், சிவக்குமார், தமிழ் பற்றாளர் ஆ.தி.பகலன், கோபால் ஆகியோர் மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து சமூக ஆர்வலர் சாமிநாதன் வகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் தேர்வு எழுத பேனாவினை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கல்வி ஒளி நண்பர்கள் குழுவின் செயலாளர் ஈ சி ஆர் சோலை த. முனுசாமி நன்றியுரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் கல்வி ஒளி நண்பர்கள் குழு பொறுப்பாளர்கள் பிரியா துரைராஜ் , பாக்யலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற அனைவரும் வாழ்த்தினர்.

Tags

Next Story