அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், காளாஞ்சிபட்டியில் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தொகுதி-4 மற்றும் தொகுதி-2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4 மற்றும் தொகுதி-2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச்.22) முதல் தொடங்கவுள்ளது.போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story