அரசுபணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி துவக்கம்

அரசுபணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி துவக்கம்

திட்டக்குடியில் மாணவர்களுக்கு பயிற்சி கையேட்டை வழங்குதல்

கடலூர் மாவட்டம்,திட்டக்குடி அரசு கலைகல்லூரியில் அரசு பணியாளர் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை அமைச்சர் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கான பயிற்சி கையேட்டினை வழங்கினார்.

உடன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையர் எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், இணை இயக்குநர் (தொழில் ஆராய்வு) ஆ.அனிதா, மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) மு.சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

Tags

Next Story