நீதிமன்றத்தில் இலவச இ.என்.டி மருத்துவ முகாம்: முதன்மை நீதிபதி பாபு துவக்கி வைப்பு

நீதிமன்றத்தில் இலவச இ.என்.டி மருத்துவ முகாம்: முதன்மை நீதிபதி பாபு துவக்கி வைப்பு

மருத்துவ முகாம்

திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி பாபு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள பார் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி பாபு தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சுதர்சன், துணைத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி தில்லைநகரில் உள்ள ராயல் பியர்ல் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவமனை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.‌ திருச்சி நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்களின் உதவியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

Tags

Next Story