இலவச கண் பரிசோதனை முகாம்

ராசிபுரத்தில் வக்கீல்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

ராசிபுரம் சார்பு நீதிமன்றம் வட்ட சட்டப்பணிகள் குழு, ராசிபுரம் தாலுக்கா சார்பு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில் வழக்கறிஞர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமிற்கு சார்பு நீதிமன்ற நீதிபதி தீனதயாளன், குற்றவியல் நீதிபதி மோகனப்பிரியா, ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமில், முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வெள்ளை எழுத்து, கண் புரை, சர்க்கரை நோய், கண் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கருவிழியில் புண், வழக்கறிஞர்களின் கண் நோய் தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

முகாமில், ராசிபுரம் தாலுக்கா வக்கீல் சங்க தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர்கள் ஆர்.கே.டி. தங்கதுரை, செல்வகுமார், கிரிமினல் வக்கீல் சங்க தலைவர் வாசுதேவன், வழக்கறிஞர்கள் சேகர் .முருகன். கதிர்வேல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story