இலவச கண் சிகிச்சை முகாம் தொடக்கம்

இலவச கண் சிகிச்சை முகாம் தொடக்கம்
இலவச கண் சிகிச்சை முகாம்
நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி அரிமா சங்கத்தின் சார்பாக கரூர் அரசன் கண் மருத்துவமனையின் இலவச கண்சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சோழசிராமணி அரிமா சங்கத்தின் சார்பாக கரூர் அரசன் கண் மருத்துவமனையின் இலவச கண்சிகிச்சை முகாம் சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா சந்திரசேகர் , கண் ஒளித்திட்ட மாவட்ட தலைவர் அரிமா பொன்னுசாமி , சோழசிராமணி சங்க செயலாளர் அரிமா சுரேஷ்குமார், பொருளாளர் அரிமா சதாசிவம் , கண்ணொளி திட்ட கிளை ஒருங்கிணைப்பாளர் சகா.கண்ணன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்நிகழ்வில் 63 நபர்கள் காண்பரிசோதனை செய்து கொண்டனர். 20 நபர்கள் கண் புரை அறுவைசிகிச்சைக்காக கரூர் அரசன் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags

Next Story