நாமக்கலில் பத்திரிகையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

நாமக்கலில் பத்திரிகையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

முகாமில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள்

நாமக்கல்லில் பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மகரிஷி கண் மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கம் நாமக்கல் கிளை மற்றும் ரெட்கிராஸ் சங்கம் நாமக்கல் இணைந்து நாமக்கல் மகரிஷி கண் மருத்துவமனையில் நாமக்கல் மாவட்ட பத்திரிகையாளா்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சர்க்கரை இரத்தக் கொதிப்பை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்து மகரிஷி கண் மருத்துவமனை மருத்துவர் பெ.ரங்கநாதன் பேசுகையில், இரவு பகல் பாராது செய்தி சேகரித்தும், செல்போனில் வரும் தகவல்கள் மற்றும் கணினி முன் அமர்ந்து நாள் முழுவதும் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும், அழகான காட்சிகளை படம் பிடித்து மக்களுக்கு காண்பிக்கும் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் கேமராமேன்களுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்படும் என்பதால் இலவச முகாம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த கண் சிகிச்சை முகாமில் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடக செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மகரிஷி கண் மருத்துவமனை டாக்டர்கள், கண் பரிசோதனை செய்யும் தொழில் நுட்ப உதவியாளர்கள், செவிலியர்கள் சிறந்த முறையில் பரிசோதனை செய்தனர்.

பிறகு அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story