காஞ்சிபுரத்தில் 187 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை

காஞ்சிபுரத்தில் 187 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை

 கண் அறுவை சிகிச்சை முகாம் 

ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிரான்ட் மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிரான்ட் மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில், கடந்த மாதம் 31 முதல், ஏப்., 9 வரை ஒலிமுகமதுபேட்டையில் உள்ள அன்பு ஐ.டி.ஐ.,ல் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் பரணிதரன் முகாமை துவக்கி வைத்தார். இதில், 880க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 187 பேருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ரோட்டரி கிளப் காஞ்சிபுரம் கிரான்ட் சங்கத் தலைவர் சிவா சிதம்பரம், நிர்வாக இயக்குனர் முருகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story