இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண்சிகிச்சை முகாம்

புதுக்கோட்டை அருகேயுள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், சண்முகநாதன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், ஆதிகாலத்து அலங்கார மாளிகை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின. புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ராஜாமுகமது தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் பிச்சப்பா மணிகண்டன், இயக்குநர்கள் சண்முகநாதன், பிச்சப்பா, செயலர் மு. விஸ்வநாதன், முதல்வர் குழ.முத்துராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்ற 240 பேருக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கண்ணாடிகளும், ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. முன்னதாக ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிர்வாக இயக்குநர் ஜெயபால் வரவேற்றார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பெருமாள் நன்றி கூறினார்.

Tags

Next Story