சேலம் மணக்காட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்

சேலம் மணக்காட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்

சேலம் மாநகராட்சி மணக்காடு சமுதாய கூடத்தில் அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தி ஐ பவுண்டேசன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.


சேலம் மாநகராட்சி மணக்காடு சமுதாய கூடத்தில் அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தி ஐ பவுண்டேசன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

சேலம் மாநகராட்சி 12-வது வார்டு மணக்காடு சமுதாய கூடத்தில் நேற்று சேலம் அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுரும்பார் குழலி, ம.செந்தில்குமார், கார்த்திகேயன், த.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் சங்கீதா நீதிவர்மன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் மணக்காடு, ஜான்சன்பேட்டை, அன்புநகர், கோர்ட்டு ரோடு காலனி, கோகுல்நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர். மேலும்சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையும் கண்ணீர் அழுத்தம், விழித்திரை, கருவிழி, கண் நரம்பியல் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் கொண்டு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கார்த்திகேயன், தி கிரேஸ் கம்யூனிட்டி கல்லூரி பேராசிரியர் கலைச்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக மணக்காடு, அன்புநகர், ஜான்சன்பேட்டை பகுதியில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story