இலவச வீட்டுமனை பட்டாக்கள் - அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார்

ரூ.24.98 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் - அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுராசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனா். .

திருச்செங்கோடு கோட்டத்தில் ரூ. 13.18 கோடி மதிப்பீட்டில் 1,381 பயனாளிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் பிரபாகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மா.பிரியா, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ம.சுஜாதா, துணைத் தலைவர் ராஜவேல் (எ) ராஜபாண்டி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story