திருப்பத்தூரில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா

திருப்பத்தூரில்  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா

பட்டா வழங்கல்

திருப்பத்தூரில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை,

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர்,

கந்திலி ஒன்றிய குழு தலைவர், மற்றும் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், ஆகியோர் கலந்துக்கொண்டனர். மாவட்டத்தில் உள்ள வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு நத்தம் பட்டா 603 பேருக்கு, இ பட்டா 368 பேருக்கும், நகர நிலவரி பட்டா 501 பேருக்கும் மொத்தம் 1512 பேருக்கு 7.40 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story