பட்டுக்கோட்டையில், இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம் 

பட்டுக்கோட்டையில், இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம் 
 மூட்டு தேய்மான முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை - வெட்டிக்காடு ஸ்ரீ சீரடி கிருஷ்ணா சீரடி சாய்பாபா ஆலயம் அருகில், பட்டுக்கோட்டை கிங்ஸ் நண்பர்கள் மற்றும் நாமக்கல் இமயம் மருத்துவமனை சார்பில், இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, லயன்ஸ் எம்.எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கிங்ஸ் நண்பர்கள் சங்கத் தலைவர் செல்லக்கண்ணு வரவேற்றார். செயலாளர் ஆர்.என்.பாலாஜி மருத்துவ முகாம் நோக்கம் குறித்து பேசினார். நாமக்கல் இமயம் மருத்துவமனை மருத்துவர்கள் பி.மதன்குமார், முருகன் ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் நஜி, பொறியாளர் சந்திரமோகன், பொறியாளர் நாடிமுத்து, வி.கே.டி.மணிகண்டன், முரளி கிருஷ்ணன், வி.சுரேஷ், பச்சைமுத்து, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக பொருளாளர் தீபன் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இம்முகாமில் 565 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். மேல் சிகிச்சைக்காக 35 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story