அரசு பள்ளிகளில் லேப்டாப்களை பழுது நீக்கும் பணி தொடக்கம்

அரசு பள்ளிகளில் லேப்டாப்களை பழுது நீக்கும் பணி தொடக்கம்

இலவச மடிக்கணினி

அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச மடிக்கணினிகளில் பழுது

அரசு பள்ளிகளில் மடிக்கணினிகளை பழுது நீக்கும் பணி துவக்கம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது.

அரசு பள்ளிகளில் இருந்த இலவச லேப்டாப்களை பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் அவை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயன்படுத்தாமல் தேங்கியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட லேப்டாப்களை பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த பணியை, 20கும் மேற்பட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவற்றை அரசு பள்ளிகளின், அலுவலக பயன்பாட்டுக்கு வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story