இலவச நர்சிங் பயிற்சி: விண்ணப்பிக்கலாம்

இலவச நர்சிங் பயிற்சி:  விண்ணப்பிக்கலாம்

அரவிந்த் கண் மருத்துவமனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அரவிந்த் கண் மருத்துவமனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரவிந்த் கண் மருத்துவனை சார்பில் ஈராண்டு செவிலியர் பயிற்சி வழங்கப்படுகிறது.இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. பிளஸ் 2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, https://aravind.org/mlop-recruitment என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும். நேர்காணலின்போது +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy), ஆதார் அட்டை (Original + Xerox copy), மாற்றுச் சான்றிதழ் TC (Original + Xerox copy) ஆகிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

Tags

Next Story