குமாரபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பிறந்தநாள் விழா

குமாரபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பிறந்தநாள் விழா

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

குமாரபாளையத்தில் அண்ணாசாமி சுந்தரம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அபெக்ஸ் காலனியில் நடைபெறும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி மற்றும் மகாத்மா காந்தியின் சீடர் அண்ணாசாமி சுந்தரம் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரை, பேச்சு, விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தன்னார்வலர் கலைவாணி, தீனா, அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story