மர்மமான ஒன்றை புதைக்கப்பட்டதற்கான தடயத்தால் அச்சம்

மர்மமான ஒன்றை புதைக்கப்பட்டதற்கான தடயத்தால் அச்சம்

பழனி அருகே தனியார் தோட்டத்தில் பூஜை செய்யப்பட்டு மர்மமான ஒன்றை புதைக்கப்பட்டதற்கான தடயம் உள்ளதால் புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடக்கிறது.  

பழனி அருகே தனியார் தோட்டத்தில் பூஜை செய்யப்பட்டு மர்மமான ஒன்றை புதைக்கப்பட்டதற்கான தடயம் உள்ளதால் புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடக்கிறது.

பழனி அருகே மேல்கரைப்பட்டி கிராமத்தில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலத்தை கனகராஜ் என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் இன்று அந்த நிலத்தில் பூஜை செய்யப்பட்டு ஏதோ ஒன்றை புதைத்ததற்கான அடையாளம் இருந்தது‌. மேலும் அதன்மீது பூக்களும் தூவப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அருகிலேயே பழனி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் பெண் குழந்தைக்கான சீருடை கிடந்ததால் பரபரப்பு அதிகமானது. தொடர்ந்து இப்பகுதிகளில் ஏதேனும் குழந்தைகள் காணாமல் போனதாக உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story