குட்கா விற்பனை செய்த பழ வியாபாரி கைது

குட்கா விற்பனை செய்த பழ வியாபாரி கைது

பறிமுதல் செய்யப்பட குட்கா 

சாமியார்மடம் பகுதியில் பழக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வியாபாரி கைது செய்த போலீசார் 2.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பழையசாலை புத்தன்வீடு, சாமியார்மடம் பகுதியில் வசித்து வருபவர் மாகின் வயது(57) இவர் அந்த பகுதியில் சொந்தமாக பழக்கடை நடத்தி வருகிறார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை இவர் கடையில் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் குமரி மாவட்ட எஸ்.பி சுந்தரவணம் உத்தரவின் பேரில் போதை பொருள் தடுப்பு தனிப்படை இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர் அப்போது மாகின் கடையில் மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது உடனே போலிசார் அதிரடியாக கடையில் சென்று சோதனை போட்ட போது 2.5 கிலோ போதை பொருள்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.மாகினை கைது செய்து போலிசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story