தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்

தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தொற்றா நோய் பரிசோதனைகள், ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை இருதய பரிசோதனை, பல் பரிசோதனை, சளி பரிசோதனைகள், கண் பரிசோதனைகளை, சர்க்கரை , பரிசோதனைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டனர்.

பிசியோதெரபி, யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவம், நோய்களுக்கு உரிய மருந்துகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், நாராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர் ராமர், நகராட்சி கவுன்சிலர் துரை.காமராஜ், மருத்துவர் அரவிந்தன், உள்ளிட்ட சுகாதார துறையினர், பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இதேபோன்று பெரம்பலூர் ஒன்றியம், அம்மாபாளையம், ஊராட்சியிலும் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் ஊராட்சியிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், கிராம ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டுமருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.

Tags

Next Story