சகாதேவ சித்தர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

சகாதேவ சித்தர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

சகாதேவ சித்தர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள சகாதேவர் சித்தர் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சகாதேவர் சித்தர் கோவிலில் ஆனி மாத பவுர்ணமி சிறப்பு ஜல பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கண்டு குடும்ப கஷ்டங்கள் நீங்க, செல்வம் பெருக, குடும்ப ஒற்றுமை பலம்பட தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிட வெற்றிலை பூக்கள் கொண்டு ஜலபூஜை செய்தனர்.இதில் சோமசமுத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story