காடம்பாடி நகராட்சி பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

காடம்பாடி நகராட்சி பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் 

நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 17.02.2024 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தகவல் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் நாகப்பட்டினம் இணைந்து டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி காடம்பாடியில் 17.02.2024 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 3மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 18 வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். 8ம் வகுப்பு தேர்ச்சி. பத்தாம் வகுப்பு. பன்னிரெண்டாம் வகுப்பு. கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் மற்றும் தையல்கலை பயிற்சி பெற்றவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 80-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள இம்மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வி தகுதி குறித்த விவரங்கள் முன்னரே பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வேலைநாடுநர்கள் கீழ்கண்ட QR கோடினை பயன்படுத்தி தங்களது விவரங்களை உள்ளீடு செய்து பங்கேற்கலாம். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய விரும்புபவர்கள் அலுவலக தொலைபேசி எண்ணில் (04365-252701) தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்புப் பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்பு (Bio-Data) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story