கேலோ இந்தியா விழிப்புணர்வு மாராத்தான் போட்டி

கேலோ இந்தியா விழிப்புணர்வு மாராத்தான் போட்டி

வேலூரில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடந்தது.

வேலூரில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடந்தது.

வேலூரில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மாராத்தான் போட்டி. வேலூரில் இன்று வேலூர் கோட்டை அருகிலிருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கேலோ இந்தியா குறித்த, விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆண்கள் பெண்கள் என தனித்தனி பிரிவாக நடத்தப்பட்ட போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஓடினர். இதில் உடல் நலன் மற்றும் விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இப்போட்டி நடைபெற்றது. கோட்டையிலிருந்து துவங்கிய இந்த மாராத்தான் போட்டி முக்கிய சாலை வழியாகச் சென்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இவ்விழாவில் வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்த குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் நொய்லின் ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story