பணம் வைத்து சூதாடிய கும்பல் கைது

பணம் வைத்து சூதாடிய கும்பல் கைது

கைது 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே துவராபதி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துவராபதி பகுதியில் உள்ள புளியமரத்தடி பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் துவராபதி கிராமத்தை சேர்ந்த அஜீத் (25), சதீஸ் (32), அழகன் (45), சேர்வீடு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (40), சின்னாண்டி (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story