அருமனை நூலகத்தில் சூதாட்டம்: 5 பேர் கைது

அருமனை நூலகத்தில் சூதாட்டம்:   5 பேர் கைது
பைல் படம்
அருமனை நூலகத்தில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டம் அருமனை அருகே மாங்கோடு பகுதியில் அரசு நூலகம் ஒன்று உள்ளது இந்த நூலகம் அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து சில பகுதிகள் உடைந்து காணப்படுகிறது. நூலகம் பூட்டப்பட்டிருந்தாலும் சில சமூக விரோதிகள் கட்டடத்தின் சேதமடைந்த பகுதிகள் வழியாக உள்ளே சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

இன்று காலையிலும் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அருமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நூலகத்தில் உள்ளே ஐந்து பேர் சீட்டுகளை வைத்து சூதாடிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் காரோடு பகுதியை சேர்ந்த கிறிஸ்துதாஸ், ஷாஜி, சின்ன பிள்ளை மகன் ஷாஜி, அனி, செல்வராஜ் என்பது தெரிந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த சீட்டுகள், பணம் மற்றும் 3 பைகளை பறிமுதல் செய்த போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story