கோவில் அருகே சூதாட்டம் - 3 பேர் கைது

கோவில் அருகே சூதாட்டம் - 3 பேர் கைது

சூதாட்டம் 

பவித்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட,பவித்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லைக்கரசிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பவித்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பவித்திரம் பூபள்ளி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன், சுப்பிரமணி, பவித்திரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 220யும் பறிமுதல் செய்த காவல்துறையினர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மூன்று பேரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story