பணம் வைத்து சூதாட்டம் - 3 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் -   3 பேர் கைது

சூதாட்டம் 

கொரவபட்டி பஸ் ஸ்டாப் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.650 ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கொரவப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தங்கசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 23ஆம் தேதி இரவு 8 மணி அளவில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கொரவப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாசாமி 50, வேலுசாமி 56, வெஞ்சமாங் கூடலூரை சேர்ந்த சேர்ந்த மற்றொரு மகாசாமி 65 ஆகிய மூன்று பேரும் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டு, மூவரிடமிருந்து 52 சூதாட்ட அட்டைகள், ரூபாய் 650 பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்

Tags

Next Story