பணம் வைத்து சூதாட்டம் - 3 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் - 3 பேர் கைது

 வெள்ளியணை காவல் நிலையம் 

பாகனத்தம் பகுதியில் பணம் வைத்துச் சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பாகனத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாகனத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு முள்தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகனத்தம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஜெயராஜ், கந்தசாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 250-யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story