பணம் வைத்து சூதாட்டம் - 3 பேர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, பாலத்துறை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாலதுறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அம்மன் கோவில் நடு தெருவை சேர்ந்த ஆறுமுகம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பெரும்பட்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பஜார் தெருவை சேர்ந்த பிரவீன் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர்,அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 360-யும் பறிமுதல் செய்த காவல்துறையினர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story