பணம் வைத்து சூதாட்டம் - 3 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் - 3 பேர் கைது

காவல் நிலையம் 

நெடுங்கூரில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட நெடுங்கூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் அலுவலர் சித்ராதேவிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் 16ஆம் தேதி மதியம் 3 மணியளவில், நெடுங்கூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். நெடுகூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட புகலூர் தாலுக்கா, மரகதபுரியை சேர்ந்த முருகேஷ், காருடையாம்பாளையம் அருகே உள்ள மேலப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம், தும்பி வாடி பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 360யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags

Next Story