பணம் வைத்து சூதாட்டம் - 6 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் - 6 பேர் கைது

காவல் நிலையம் 

மாயனூர் அருகே சின்ன கிணத்துப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சின்ன கிணத்துப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் ஆய்வாளர் சாந்திக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜனவரி 14-ஆம் தேதி, மதியம் 3 மணி அளவில் சின்ன கிணத்துப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள குளம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பொரணி அருகே உள்ள கும்மயம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, கரூர் ராமானுஜம் நகரை சேர்ந்த கார்த்திக், திண்டுக்கல் மாவட்டம், லந்தக்கோட்டை கன்னிமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத், சத்ய பிரகாஷ்,திருச்சி மாவட்டம்,தொட்டியம், ஏமூர்பட்டியைச் சேர்ந்த தேவராஜ், கரூர் மாவட்டம், ஜெகதாபி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலுச்சாமி ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர்.

மேலும் இவர்கள் சூதாட 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர். ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story