கொண்டலாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம்

கொண்டலாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம்

கோப்பு படம் 

கொண்டலாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூர் பகுதியில் கொண்டலாம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடி கொணடு இருப்பதாக வந்த தகவலையடுத்து. அந்த பகுதிக்கு சென்ற போலீசார் சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் கொண்டலாம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 37), பட்டக்காரன் தெருவை சேர்ந்த முரளி (44) ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story