பணம் வைத்து சூதாட்டம் - இருவர் கைது

தென்னிலை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் பிரியதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜூன் 1-ம் தேதி காலை 10:30 மணி அளவில், செங்காட்டு வலசு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு முள்தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட அரவக்குறிச்சி தாலுகா,கூடலூர் அருகே உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, கரூர் மாவட்டம், பரமத்தி, அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த தர்மன் ஆகிய இருவரையும் கைது செய்தனர் . இவர்கள் சூதாட பயன்படுத்திய சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தென்நிலை காவல்துறையினர்.

Tags

Next Story