செய்துங்கநல்லூர் தர்காவில் கந்தூரி விழா

செய்துங்கநல்லூர் தர்காவில் கந்தூரி விழா

கந்தூரி விழா

செய்துங்கநல்லூர் சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழாவையொட்டி முதல் நாள் மாலை தொழுகைக்கு பிறகு அரண்மனை கொடி எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த ஊர்வலம் செய்துங்கநல்லூர் முக்கிய வீதிகளில் வழியாக மீண்டும் தர்க்காவை வந்தடைந்தது. அதன் பின் அரண்மனைக்கொடி யேற்றப்பட்டது. தொடர்ந்து தொழுகை நடந்தது. இரவு விளக்கு ராத்திரி நடைபெற்றது. மறுநாள் காலை நேர்ச்சை வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியில் பீமா தர்கா பொருளாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் டி.என்.டி.ஜெ தலைவர் ஜமால் முகைதீன் ஆமிரி, ஜாகீர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பீமா தர்கா செயலாளர் கே.எஸ். புகாரி, தர்கா பொறுப்பாளர் பக்கீர் முகைதீன் மற்றும் சந்தை பக்கீர் மஸ்தான் தர்கா கந்தூரி விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story