பெண்ணை விடு புகுந்து தாக்கிய கும்பல் - போலிசார் வழக்கு பதிவு !!

பெண்ணை விடு புகுந்து தாக்கிய கும்பல் - போலிசார் வழக்கு பதிவு !!

விசாரணை

நாகர்கோவிலில் முன்விரோதம் காரணமாக பெண்ணை விடு புகுந்து தாக்கிய கும்பல். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில்கணேசபுரம் என்.வி தெருவை சேர்ந்தவர் நாக ரத்தினம். இவரது மகன் பிரவின். இவருக்கும் செம்மங்குடியை சேர்ந்த ராஜேஷ் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவ தினம் ராஜேஷ் கணேசபுரத்தை சேர்ந்த சந்திரசேகர், நாகராஜன், தோவாளை சேர்ந்த ஆல்வின், வல்லன்குமாரவிளை சேர்ந்த பெரோஸ், பரூக் ஆகியோர் நாகரத்தினம் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டில் நாகரத்தினத்தின் மனைவி ரோஸ்லெட் ( 50) என்பவர் இருந்தார். அவரிடம் உனது மகன் பிரவீன் இல்லையா என கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் ரோஸ்லட்டை அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ரோஸ் லெட் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story