காங்கேயத்தில் தேங்காய் பருப்பு ரூ.1 லட்சத்துக்கு ஏலம்

காங்கேயத்தில் தேங்காய் பருப்பு ரூ.1 லட்சத்துக்கு ஏலம்

தேங்காய் ஏலம்

காங்கேயத்தில் தேங்காய் பருப்பு ஒரு லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். அதில் காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த இரண்டு விவசாயிகள் 1259 கிலோ எடையுள்ள 24 தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் மூட்டைகளை ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். குறைந்தபட்ச விளையாக ரூ.65க்கும் அதிகபட்ச விலையாக ரூ.94.10க்கும் ஏலம் எடுத்தனர். 1259 கிலோ எடையுள்ள 24 தேங்காய் பருப்பு மூட்டைகள் சுமார் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 165 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story