கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கஞ்சா விற்பனை 

நீலகிரியில் தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைதான குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தமிழ்நாடு, கேரளா, கராநாடகா என மும்மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதை தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ள இடங்கள் மற்றும் சோதனை சாவடிகள் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் போலீஸாரின் துணை இல்லாமல் கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. நீலகிரியிலும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் குன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குன்னூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் குன்னூர் போலீஸார், காட்டேரி பிரிவில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வெலிங்டன் பகுதியை சேர்ந்த இமானுவேல் பெலிக்ஸ், சுகுமார் ஆகிய 2 நபர்களை கைது கஞ்சாவையும் பறிமுதல் செய்யதனர்.

போலீஸாரின் விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து குன்னூரில் விற்பனை செய்ததும், இமானுவேல் பெலிக்ஸ் இதற்கு முன்னர் வெலிங்டன் காவல் நிலையம் முன்பே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் இமானுவேல் பெலிக்ஸ் மீது ஏற்கனவே கஞ்சா விற்றதாக 6 வழக்குகள் உள்ளது.

இதனால் இமானுவேல் பெலிக்சை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவில் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் அருணா, இமானுவேல் பெலிக்சை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள இமானுவேல் பெலிக்சிடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story