போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்

போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்

கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா, மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் இன்று மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் கள்ளச்சாராயம் 20 லிட்டர், 77 மது பாட்டில்கள், சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 1000/- ரூபாய் மதிப்புடைய 100 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது 15 மதுவிலக்கு வழக்குகள் மற்றும் 01 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story