அரக்கோணம்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

அரக்கோணம்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கைது

அரக்கோணம் அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேடல், சாலை, குருவராஜபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சித்தேரி கூட்ரோடு பகுதியில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் போலீசார் வருவதை கண்டு ஓடினார்.

அவரை போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.அதில் அவர் அதேப்பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 24) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story