கஞ்சா விற்றவர் கைது - இருவர் ஆற்றில் குதித்து தப்பியோட்டம் !

கஞ்சா விற்றவர் கைது - இருவர் ஆற்றில் குதித்து தப்பியோட்டம் !

கைது

பவானிசாகர் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் ஆற்றில் குதித்து தப்பி ஓடினர்.

பவானிசாகர் அருகே கஞ்சா விற்றவர் கைது. இருவர் ஆற்றில் குதித்து தப்பி யோட்டம் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுடுதுறை சுடுகாடு அருகில் உள்ள பவானி ஆற்றின் கரையோரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானிசாகர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பவானிசாகர் காவல் துறையினர் சம்பம் நடைபெறும் இடத்திற்கு சென்ற போலீஸாரிடம் ஒருவர் சிக்கி கொண்டார் மற்ற 2 பேர் பவானி ஆற்றில் குதித்து அங்கிருந்து தப்பியோடினர்கள் .

பிடிபட்ட நபரிடம் விசாரனை நடத்தியதில் பவானிசாகர், கோழிப்பண்ணை, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த சந்திரன் என்பரின் மகன் பில்லா சூர்யா (எ) துசேந்திரன் ( 22 ) என தெரியவந்தது. அவரிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சா பொட்டலம், மொபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் அதே முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் புகழேந்திரன் (24), அரசரத்தினம் என்ப வரின மகன் திலீபன் (24) இருவரை பவானிசாகர் போலீஸார் தேடி வருகின்றனர். பிடிபட்டபில்லா சூர்யா (எ) துசேந்திரன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க உள்ளார்.

Tags

Next Story