சேலத்தில் கஞ்சா விற்றவர் சிக்கினார்
பைல் படம்
சேலம் வீராணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அத்துமீறி கஞ்சா விற்று கொண்டிருந்த சசிகுமார் என்பவரை கைது செய்தனர்.
சேலம் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் குப்பனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த சுக்கம்பட்டியை சேர்ந்த சசிகுமார் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story