நாகையில் கஞ்சா கடத்தல்: இருவர் கைது

நாகையில் கஞ்சா கடத்தல்: இருவர் கைது
நாகையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆழியூர் பிரிவு சாலை பகுதியில் வாகன சோதனையின் போது கஞ்சா கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட பெரியதும்பூர் அன்பழகன் மகன் மணிமாறன் (23), வரதராஜன் மகன் வழவன் ராஜ் (24) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தும்,

அவரிடமிருந்து சுமார் 7 கிலோ கஞ்சா மற்றும் ரூபாய்8000 பணம், ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்

Tags

Next Story