டூவீலர்களில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

டூவீலர்களில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

கஞ்சா கடத்தல் 

சிவாடி ரயில் நிலையம் அருகே டூவீலர்களில் கஞ்சா கடத்திய 4 வாலிபர்களை கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் எல்லை பகுதியாக தொப்பூர் அடுத்த சிவாடி ரயில் நிலையம் பகுதியில், சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தொப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன்.சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 டூவீலர்களில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் காவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர்.இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் அவர்கள் வைத்திருந்த பையை பரிசோதனை செய்த போது, அதில் 400 கிராம் கஞ்சா வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

விசா ரணையில் அவர்கள் சிவாடி பகுதியை சேர்ந்த சிவா,வசந்த், கெட்டுப்பட்டியை சேர்ந்த நந்தகுமார், அனுமந்தன் நகரை சேர்ந்த தினேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைதுசெய்த டூவீலருடன் கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்

Tags

Next Story