சாலையோரம் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்

 குப்பைக் கழிவுகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள் அகற்றி, மீண்டும் குப்பை கழிவுகள் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை.
மதுராந்தகம் பகுதி தேசிய நெடுஞ்சாலையின் வடக்கு பைபாஸ், திண்டிவனம் மார்க்கத்தில், ஹோட்டல் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் போன்றவற்றை, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர். இந்த குப்பை கழிவுகளை சிலர், இரவு நேரத்தில் தீயிட்டு எரித்து விடுகின்றனர். பின், மீண்டும் அதே பகுதியில் குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால், இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணியர் கண் எரிச்சல், குமட்டல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும், கட்டடக் கழிவுகளை சாலை ஓரம் கொட்டி வருகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றி, மீண்டும் குப்பை கழிவுகள் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story