சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ - வாகன ஓட்டிகள் அவதி

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ   - வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் புகைமண்டலம்

சேலம் மாவட்டம் ,மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் மேட்டூர் அருகே சுற்றுவட்டார பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் சிட்கோ தொழிப்பேட்டையில் இருந்து இரவு நேரத்தில் சாலையின் இரு புறங்களிலும் குப்பைகள் மற்றும் தொழிற்ச்சாலை கழிவுகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பையில் இரும்பு, பித்தளை, செம்பு உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் மர்ம நபர்கள் அந்த குப்பைக்கு தீ வைத்து செல்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் புகையால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுவாசிக்க முடியாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் குப்பைகளைக் கொட்டும் நபர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story