சங்கரன்கோவிலில் குப்பைகளால் நிரம்பிய குளம்: பொதுமக்கள் அவதி

சங்கரன்கோவிலில் குப்பைகளால் நிரம்பிய குளம்: பொதுமக்கள் அவதி

குப்பைகள் நிரம்பியுள்ள குளம்

சங்கரன்கோவிலில் குப்பைகளால் குளம் நிறைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள குளத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குளத்தின் பெரும்பாலான பகுதிகள் குப்பைகளால் நிரம்பி உள்ளது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும் என அப்பகுதி பொதுமக்கள் அபயக் குரல் எழுப்பி உள்ளனர்.

உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story