அங்கன்வாடி மையம் அருகே குப்பையால் சுகாதார சீர்கேடு

அங்கன்வாடி மையம் அருகே குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

செய்யூர் அருகே கீழச்சேரி காலனி பகுதியில், வீரபோகம் செல்லும் சாலையோரத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதில், 10 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

ஊராட்சியில், முறையான திடக்கழிவு மேலாண்மை இல்லாத காரணத்தால், அங்கன்வாடி மையம் அருகே குடியிருப்புப் பகுதியில் இருந்து குப்பை கொட்டப்படுகிறது. அதனால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் பரவி, நோய்தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றி, ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story