தாராபுரத்தில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தாராபுரத்தில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணா சிலைக்கு மரியாதை

தாராபுரத்தில் அறிஞர் அண்ணா 55 -வது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் உள்ளிட்ட திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தாராபுரத்தில், அறிஞர் அண்ணா 55வது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் உள்ளிட்ட திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றிய நகர பகுதிகளில், அறிஞர் அண்ணா 55வது நினைவு நாளை முன்னிட்டு வகையில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு தலைவருமான இல பத்மநாபன் தலைமையில், திமுகவினர் பொதுமக்கள், தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரை பாளையத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து தாராபுரம் காமராஜபுரம் பகுதியில் இருந்து தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில்,மௌன ஊர்வலம் நடைபெற்றது. மௌன ஊர்வலம் ஜின்னா மைதானம், பூக்கடை கார்னர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அறிஞர் அண்ணா அருகில் நிறைவடைந்தது. அங்குள்ள அறிஞர் அண்ணா திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்சியில், தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான எஸ். வி. செந்தில் குமார்,குன்டடம் ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர்,சிவ செந்தில் குமார், மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, துரை தமிழரசு,

மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் குகன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story