கட்டபொம்மன் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சுந்தரப் போராட்ட விடுதலை வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய சுதந்திரப் போராட்ட விடுதலை வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு.நாகராசன், மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்டக் கழக செயலாளர் ஸ்டார் மணி, பாப்புச்சாமி, நிர்வாகி சிவபாலன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story