ஆற்காட்டில் பெருமாள் கோவில்களில் கருட சேவை விழா

ஆற்காட்டில் பெருமாள் கோவில்களில் கருட சேவை விழா

தரிசனம் செய்த பக்தர்கள் 

ஆற்காட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் கருடசேவை விழா வெகு விமர்சையாக நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவியார் சமேத வரதராஜ பெருமாள் கோவில், தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் வரதராஜபெருமாள் கோவில், கஸ்பா வைகுண்ட வரதராஜபெருமாள் கோவில், புதிய வேலூர் மெயின் ரோடு அபயபாலாஜி சீனிவாச பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் கருட சேவை நடந்தது.

முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கோபுர தரிசனம், மகா தீபாராதனை நடந்தது தொடர்ந்து கருட வாகனத்தில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. ஆற்காடு வேதகிரி தெருவில் உள்ள பாண்டுரங்கன் கோவில் அருகில் மண்டகபடி, உள்யாளி சேவை சங்கமமானது.

இரவு அனுமந்த சேவை உற்சவர் அலங்காரம் நடந்தது. இந்த விழாவில் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் கோவில் திருப்பணிக்குழு தலைவர் சரவணன், உபயதாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story